3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி, பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் அதற்கான உண்மை இன்னும் வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.


தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி 24ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.